<p><b>தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக சமூக ஆர்வலரும் பெண் உரிமை போராளியுமான அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறார்.</b></p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/04/05/11712307655.jpg" style="width: 100%;"><br></p><p>இதனையடுத்து, தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட முடிவைதேனந்தல், மீனாட்சிபட்டி,&nbsp; மூலக்கரை, வல்லநாடு, பக்கப்பட்டி, புதுக்கோட்டை , கூட்டாம்புளி, முத்தையாபுரம், முள்ளக்காடு, பாத்திமா நகர், கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/04/05/11712307686.jpg" style="width: 100%;"><br></p><p>அப்போது அவருக்கு பொதுமக்கள் மாலை மற்றும் பொண்ணாடை அணிவித்து,&nbsp; ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்ப்பு அளித்து, அருணாதேவி ரமேஷ் பாண்டியனுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வதாக தெரிவித்தனர்.</p>