<p><b>மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு பசுவந்தனையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.</b></p><p>தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்தவர் ஜெயலலிதா. கடந்த 1948 ஆம் ஆண்டு பிறந்த இவர், திரையுலகில் முன்னணி நடிகையாகவும், அதன் பின்னர் தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சகாப்தமாகவும் திகழ்ந்தவர். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று அவரது 76 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.</p><p>இதனை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜு ஆலோசனையின்படி,&nbsp;</p><p>ஒட்டப்பிடாரம் அதிமுக கிழக்கு ஒன்றிய&nbsp; செயலாளரும், முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமான காந்தி காமாட்சி தலைமையில் அதிமுக சார்பில் பசுவந்தனையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/02/24/11708763728.jpg" style="width: 100%;"><br></p><p>இதில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி பிரதிநிதி பால்ராஜ், பசுவந்தனை நகர செயலாளர் சுப்பையா, முருகன், மாரியப்பன், அண்ணாதுரை, தென்கரை, அருணாச்சலம், நாகம்பட்டி கிளைச் செயலாளர் கருப்பசாமி, கீழமுடிமன்&nbsp; கதிர்வேல், கீழமங்கலம் முத்தழகு, மாரியப்பன், விட்டிலாபுரம் கிளை செயலாளர் மாரியப்பன். கே.துரைசாமிபுரம் கிளை செயலாளர் நம்பிராஜ், பசுவந்தனை அய்யம்பிள்ளை, நாகம்பட்டி ஆட்டோ ரவி, மேலமங்கலம் செல்வராஜ், ஒட்டப்பிடாரம் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெயராம் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>