<p><b>நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் திமுக சார்பில் நடைபெற்றது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டமா? மாநாடா? என்று வியக்கும் வகையில் மிக பிரம்மாண்டமாக தேர்தல் பரப்பரை ஆரம்பித்துள்ளனர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுகவினர்.</b></p><p>உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பிலான நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று தூத்துக்குடி - மீளவிட்டான் சாலையில் உள்ள என்.பெரியசாமி திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான&nbsp; பொன்.முத்துராமலிங்கம்&nbsp; கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/02/17/11708145401.jpg" style="width: 100%;"><br></p><p>சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான&nbsp; கீதா ஜீவன்&nbsp; தலைமையில் நடைபெற்ற இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான&nbsp; அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்&nbsp; என்.ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர்&nbsp; ஆனந்தசேகரன், மாநில சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர்&nbsp; சபி, மாநில மீனவரணி துணை அமைப்பாளர்&nbsp; புளாரன்ஸ், துணை மேயர்&nbsp; ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/02/17/21708145402.jpg" style="width: 100%;"><br></p><p>தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் என ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்த நாடாளுமன்ற முதல் தேர்தல் பரப்புரை கூட்டமானது பொதுக்கூட்டமா? அல்லது மாநாடா என்று வியக்கும் வகையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் இருந்தது.</p><p>வரும் நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி மீண்டும் கனிமொழி போட்டியிடுவாரா? இல்லையா? என்ற சந்தேகங்கள் ஒரு புறம் இருந்தாலும், தூத்துக்குடி எம்பி தொகுதியை மீண்டும் திமுகவே கைப்பற்றும் என்பதில் மாற்றுகருத்து இல்லை என்று கணிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.</p>