<p><b>தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக மதுபாலன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.</b></p><p>தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் பணி இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த மதுபாலன் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று பொறுப்பேற்றுக் காெண்டார்.&nbsp;</p><p><b>பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது:-</b></p><p>"தூத்துக்குடி மாநகராட்சியில் சுகாதாரம், சாலைப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்" என்றார்.&nbsp;</p><p>புதிய ஆணையருக்கு மாநகர கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், துணைப் பொறியாளர் சரவணன் செயற் பொறியாளர் ரங்கநாதன், துணை ஆணையர் ராஜாராம், உதவி ஆணையர்கள் ராமசந்திரன், தனசிங், சேகர், சொர்ணலதா, சுகாதார அலுவலர் சுமதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.&nbsp;</p>