<p><b>10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குவதற்கு தேர்வுத்துறைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது</b>.</p><p>தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தயார் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதற்காக மாணவர்களை பள்ளிக்கு நேரில் வரவழைத்து விவரங்களைப் பெறலாம் என்றும், பொதுத்தேர்வுக்கான கட்டணத்தையும் வசூலிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.<br></p><p>ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவர்களை&nbsp; அழைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்போர், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு பிற ஒரு நாளில் அவகாசம் வழங்க அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br></p>