உங்கள் ரேசன் கார்டுகளில் எதுவும் சிக்கல் இருக்கா? உங்களுக்கு தான் இந்த வாய்ப்பு... பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
நிருபர்
January 19, 2024
உங்கள் ரேசன் கார்டுகளில் எதுவும் சிக்கல் இருக்கா? உங்களுக்கு தான் இந்த வாய்ப்பு... பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
<p><b>தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நாளை (ஜன.20) வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.</b><br></p><p>இது தாெடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில்:-</p><p>பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஜனவரி மாதத்திற்கான சிறப்பு முகாம் 20.01.2024 அன்று சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. </p><p>இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல், போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். </p><p>மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.</p>