திருச்செந்தூர் கோயிலில் வேலை வாய்ப்பு... உடனே விண்ணப்பிங்க!
நிருபர்
January 18, 2024
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
<p><b>தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் உதவி பொறியாளர், இளநிலை மின் பொறியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.</b></p><p>இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.</p><p><b>உதவிப் பொறியாளர் (சிவில்)</b></p><p><b>காலியிடங்களின் எண்ணிக்கை : 1</b></p><p><b>கல்வித் தகுதி </b>: கட்டிடப் பொறியியலில் (B.E Civil) இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.</p><p><b>சம்பளம்</b> : ரூ. 36,700 – 1,16,200</p><p><br></p><p><b>இளநிலை மின் பொறியாளர்</b></p><p><b>காலியிடங்களின் எண்ணிக்கை : 6</b></p><p><b>கல்வித் தகுதி :</b> மின் பொறியியலில் பட்டயப்படிப்பு (Diploma in EEE) படித்திருக்க வேண்டும்.</p><p><b>சம்பளம் : </b>ரூ. 35,900 – 1,13,500</p><p><br></p><p><b>மடப்பள்ளி</b></p><p><b>காலியிடங்களின் எண்ணிக்கை : 3</b></p><p><b>கல்வித் தகுதி : </b>தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கோயிலின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.</p><p><b>சம்பளம்</b> : ரூ. 11,600 – 36,800, 2 பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் ரூ. 6,000</p><p><br></p><p><b>திருவலகு</b></p><p><b>காலியிடங்களின் எண்ணிக்கை : 1</b></p><p><b>கல்வித் தகுதி</b> : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.</p><p><b>சம்பளம்</b> : தொகுப்பூதியம் ரூ. 6,000</p><p><b>வயதுத் தகுதி</b> : விண்ணப்பதாரர் 01.01.2024 அன்று 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.</p><p><br></p><p><b>தேர்வு செய்யப்படும் முறை :</b> இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.</p><p><br></p><p><b>விண்ணப்பிக்கும் முறை : </b>இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.</p><p><br></p><p><b>முகவரி: </b>இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி. - 628215</p><p><br></p><p><b>விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.02.2024</b></p><p><br></p><p>இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.</p>