திண்டுக்கல் அய்யம்பாளையம் மாட்டு வண்டி பந்தயம் தேதி மாற்றம்!
நிருபர்
January 06, 2024
திண்டுக்கல் அய்யம்பாளையம் மாட்டு வண்டி பந்தயம் தேதி மாற்றம்!
<p><b>திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் அய்யம்பாளையத்தில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமின் 71 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 11 ஆம் ஆண்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்படுகிறது.</b></p><p>இந்த பந்தயமானது, வருகிற 20.1.24 மற்றும் 21.2.24 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், திமுக மாநில இளைஞர் அணி மாநாடு வருகின்ற 21.1.2024 அன்று நடைபெறக்கூடிய காரணத்தால், </p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/01/06/11704548578.jpg" style="width: 100%;"><br></p><p><b>20.1.24 மற்றும் 21.2.24 ஆகிய இரு தேதிகளுக்கு பதிலாக, 13.1.2024 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கும் மற்றும் 14.1.2024 ஞாயிறுக்கிழமை காலை 7 மணிக்கும் என இரு தினங்களில் நடைபெறும் </b>என அய்யம்பாளையம் மாட்டு வண்டி பந்தயக்குழு சர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதிய பந்தய நோட்டிஸ் அச்சடிக்கப்பட்டு, பந்தய மாட்டின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. </p>