பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
நிருபர்
December 11, 2023
பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
<p><b>இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</b><br></p><p>"இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தாெகை திட்டத்தின் கீழ், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின ஆகிய பிரிவுகளைச் சார்ந்து நடப்பாண்டில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தாெகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) 31.12.2023க்குள் விண்ணப்பிக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.</p><p>தகுதிகள்: மாணவ/மாணவியர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 இலட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். 2023 -24 ஆம் ஆண்டில் https://Scholarships.gov.in/public/FAQ/topclass _school_list 2211 compressed.pdf என்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மட்டுமே இக்கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>புதுப்பித்தல்: கடந்த நிதியாண்டில் புதியது கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ/மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் Renewal Application என்ற இணைப்பில் (Link) சென்று கடந்த ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவு செய்து 2023-24ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை 31.12.2023க்குள் புதுப்பிக்க வேண்டும்.</p><p>புதியது : நடப்பாண்டில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயின்று புதிதாக விண்ணப்பிக்க விரும்பும்; மாணவ/மாணவியர்கள் முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்று, பட்;டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் New Registration என்ற இணைப்பில் சென்று தங்களது விவரங்களை உரிய ஆவணங்களுடன் 31.12.2023க்குள் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p>கல்வி நிறுவனங்கள்: தகுதியான மாணவ/மாணவியர்கள் இணையதளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள் சரியாக உள்ளனவா என 15.01.2024 க்குள் சரிபார்த்தல் வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட National Scholarship Portal (https//scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (https//socialjustice.gov.in) பயன்படுத்தி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.</p>