<p><b>தூத்துக்குடியில் 3 மழைநீர் வாறுகால்களை உடனடியாக தூர்வார வலியுறுத்தி அமமுக கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு, கோரிக்கை மனு அளித்தனர்.&nbsp;</b><br></p><p>தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் கடலுக்கு செல்கின்ற 3 வாறுகால்களை போர்கால அடிப்படையில் தூர்வார வலியுறுத்தி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் இரா.ஹென்றி தாமஸ் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/01/16/11610795040.jpg" style="width: 100%;"><br></p><p>இந்நிகழ்வின் போது, மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் சண்முககுமாரி, மகளிர் அணி மாவட்ட&nbsp; செயலாளரும், முன்னாள் மேயருமான அந்தோணி கிரேஸ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளரும், நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான எட்வின் பாண்டியன், மாவட்ட அம்மா பேரவை&nbsp; துணைச் செயலாளர் ராமசந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.<br></p>