<p dir="ltr">தூத்துக்குடி&nbsp; மாவட்டம்,விளாத்திகுளம் தாலுகா, சூரங்குடி பகுதி வேம்பார் ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உடலை தேடி வருகின்றனர்.<br></p><p dir="ltr">தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள&nbsp; வேம்பார் சிந்தாமணி நகரைச் சேர்ந்த&nbsp; விஜி மகன் காளிமுத்து (19), அதே பகுதியியை சேர்ந்த காந்தி மகன் ரஞ்சித்குமார் (19) ஆகிய இருவரும் நண்பர்களுடன் நேற்று <a href="tel:14012021">(14.01.2021</a>) மாலை பாலத்தின் அடியில் ஆற்றில் குளிக்கச் சென்றனர். குளிக்கச் சென்றவர்கள் வெகு நேரமாகியும் திரும்பவராததால் அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சூரங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடினர்.</p><p dir="ltr">இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஜெயக்குமார் உத்தரவின்பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், விளாத்திக்குளம் காவல் ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர்கள் முனியசாமி, குருசாமி மற்றும் காவல்துறையினர், தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த சங்கு குளியாள் குமார் என்பவர் தலைமையில் 6 பேர், தீயணைப்புத்துறை அலுவலர் இருதயராஜ் தலைமையில் 5 பேர் ஆகியோர் அடங்கிய குழுவினர் உடனடியாக அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.</p><p dir="ltr"><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/01/15/11610715023.jpg" style="width: 100%;"><br></p><p dir="ltr">சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உள்ளிட்டோர்&nbsp; நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். இந்த தேடுதலில் வேம்பாரைச் சேர்ந்த காந்தி மகன் ரஞ்சித்குமார் (19) மட்டும் வேம்பார் அக்கரையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொருவரான காளிமுத்துவை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.</p><p dir="ltr"><b>சின்னப்பன் எம்எல்ஏ நேரில் ஆறுதல்</b></p><p dir="ltr"><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/01/15/11610716832.jpg" style="width: 100%;"><b><br></b></p><p> </p><p dir="ltr">காலை முதலே&nbsp; மீட்பு பணிகளில் உடனிருந்து கவனித்து வந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஒரு இளைஞரின் உடல் மட்டும்&nbsp; கண்டெடுக்கப்பட்டதைத்&nbsp; தொடர்ந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.<br></p>