<p><b>இந்திய அரசியலின் சிறந்த ராஜதந்திரியாக டாக்டர் கலைஞர் அவர்களை சொல்லுவார்கள். ஆனால் தற்போது கலைஞரைப் போலவே ராஜதந்திரியாக எடப்பாடி பழனிச்சாமி விளங்குகிறார் என்பதுதான் உண்மை.</b></p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2023/09/26/31695748667.jpg" style="width: 100%;"><br></p><p>கலைஞரைப் போல எழுத்தாற்றல், பேச்சாற்றால், வசீகரிக்கும் காந்தக்குரல், தோற்றப் பொலிவு இல்லையென்றாலும், அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தி வெட்டுவதில் எடப்பாடி&nbsp; ராஜதந்திரிதான் அதில் சந்தேகமேயில்லை.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2023/09/26/61695748667.jpg" style="width: 100%;"><br></p><p>ஜெயலலிதா அம்மையார் மறைவிற்குப் பிறகு ஓபிஎஸ்ஸைப் பற்றி சசிகலாவிடம் போட்டுக் கொடுத்து முதலில் பிரிவினையை உண்டு பண்ணினார். பின்னர் சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் ஆனார். அதன்பிறகு டி.டி.வி.தினகரனை பந்தாடி கட்சியை விட்டு வெளியேற்றினார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2023/09/26/11695748666.jpg" style="width: 100%;"><br></p><p>பின்னர் ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்த்து நான்கரை ஆண்டுகால ஆட்சியை சிறப்பாக முடித்தார். பின்னர் பொதுக்குழுவை கூட்டி ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு விரட்டினார். நீதிமன்றத்திற்கு ஓபிஎஸ்ஸை போக வைத்து கட்சியின் சின்னத்தையும், அலுவலகத்தையும் கைப்பற்றினார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2023/09/26/51695748667.jpg" style="width: 100%;"><br></p><p>இவை அனைத்திற்கும் பாஜகவை நண்பனாக, உற்ற தோழனாக காண்பித்துக் கொண்டு அனைத்தையும் கனக்கச்சிதமாக செய்து முடித்தார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2023/09/26/21695748789.jpg" style="width: 100%;"><br></p><p>கொங்கு மண்டலத்தில் வலிமையான தலைவராக உருவெடுக்கும் செந்தில் பாலாஜியை அண்ணாமலையோடு மோத விட்டு செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்வை அஸ்தமிக்க வைத்து விட்டார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2023/09/26/31695748789.jpg" style="width: 100%;"><br></p><p>தனது காரியங்கள் அனைத்தும் முடிந்தப் பிறகு மதுரையில் மாநாட்டை நடத்தி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்திய பிறகு இறுதியில் பாஜகவையும் தமிழ்நாட்டு கூட்டணியில் இருந்து கழட்டி விட்டு விட்டார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2023/09/26/11695748789.jpg" style="width: 100%;"><br></p><p>எடப்பாடியின் இந்த அதிரடி முடிவை பாஜகவின் நிர்வாகிகளால் நம்பமுடியவில்லை. அவர்கள் அதிலிருந்து முழுமையாக இன்னும் மீண்டு வரமுடியவில்லை என்பதே உண்மை.</p><p>இப்போது "இந்தியா" கூட்டணியை உடைக்க முக்கிய பத்திரிக்கையாளர்கள் பல்வேறு கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார்களாம்.</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;- பெ.செந்தில்குமார்</p>