தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது
நிருபர்
September 24, 2023
தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது
<p><b>தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.</b></p><p>தூத்துக்குடி ஆதிபராசக்திநகரை சேர்ந்த சிதம்பரம் மகன் வசீகரன் (42) என்பவர் கடந்த 21.09.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார். பின்னர் அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது.</p><p>இதுகுறித்து வசீகரன் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் சுரேஷ்குமார் (40) என்பவர் மேற்படி வசீகரனின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.</p><p>இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>மேற்படி கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார் மீது ஏற்கனவே சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>