<p><b>தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி பாளை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.</b></p><p>பெரியார் பிறந்த நாளான செப்.17ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தந்தை பெரியாரின் 145-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி பாளை சாலையில் உள்ள அவரது சிலைக்கு திமுக சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பெரியார் சிலை முன்பு சமூகநீதி நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2023/09/17/11694923524.jpg" style="width: 100%;"><br></p><p>இதில், திமுக நிர்வாகிகள்,&nbsp; மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>