<p><b>காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் அதை நிறைவு செய்தார். இந்த யாத்திரையின் ஓராண்டு நிறைவையொட்டி, நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடத்துகின்றனர்.</b></p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2023/09/07/11694087469.jpg" style="width: 100%;"><b><br></b></p><p>அதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாநில துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம் தலைமையில் பாதயாத்திரையானது, தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே ஆரம்பிக்கப்பட்டு, வஉசி சாலை வழியாக பழைய மாநகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2023/09/07/21694087469.jpg" style="width: 100%;"><br></p><p>இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுடலையாண்டி, டேனியல் ராஜ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்</p>