தூத்துக்குடி மாநகராட்சி சொத்துவரி அளவீடுகளில் கூடுதல் மதிப்பீடா... முறையீடு செய்து தீர்வு காணலாம்!
நிருபர்
August 10, 2023
தூத்துக்குடி மாநகராட்சி சொத்துவரி அளவீடுகளில் கூடுதல் மதிப்பீடா... முறையீடு செய்து தீர்வு காணலாம்!
<p><b>சொத்துவரி அளவீடுகளில் மதிப்பீடு கூடுதலாக இருந்தால், மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழுவில் விண்ணப்பித்து தீர்வு பெறலாம் என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.</b></p><p><b style="color: rgb(206, 0, 0);">இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</b></p><p>தமிழ்நாடு நகர் புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 இன் படி, ஒவ்வொரு மாநகராட்சிக்கும் வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு அமைக்க தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தூத்துக்குடி மேயர் குழுவின் தலைவராகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட 9 மாமன்ற உறுப்பினர்கள் குழுவின் உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள்.</p><p>மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர், மண்டல அலுவலக உதவி ஆணையர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் மற்றும் சிறப்பு வருவாய் ஆய்வாளர் ஆகியோரும் இந்த குழுவில் இணைந்து செயல்படுவார்கள்.</p><p>பொதுமக்கள் தங்களுக்கு மாநகராட்சி மூலம் நிர்ணயம் செய்யப்படும் சொத்துவரி அளவீடுகளில் மதிப்பீடு கூடுதலாக இருந்தாலும், வேறு ஏதேனும் வரிவிதிப்பு குறித்து குறைகள் இருப்பினும் தாங்கள் இந்த குழுவில் மேல்முறையீடு செய்யலாம்.</p><p>தங்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் மேற்காணும் குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு ஆணையர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>