<p><b>விபத்தில் காயம் ஏற்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் உள்ள&nbsp;</b><b>வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுக்கு&nbsp;</b><span style="font-weight: 700;">தியாகிகள் உதவித் தொகையானது அவரது கையில்</span><span style="font-weight: 700;">&nbsp;கிடைத்திட</span><b>&nbsp;நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.</b></p><p><b style="color: rgb(57, 123, 33);">இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அளித்துள்ள கோரிக்கை மனுவில்:-</b>&nbsp;</p><p>இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வாரிசுதாரர் திரு வீமராஜா (எ) ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை அவர்கள் விபத்தில் காயம் ஏற்பட்டு, கடந்த ஓராண்டாக பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார்.</p><p>தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தியாகிகள் உதவித் தொகை பெற்று வந்துகொண்டிருந்தார். நடக்க முடியாத சூழ்நிலையால் மார்ச் மாதம் ஊதியம்கூட இன்னும் பெறவில்லை என தெரிய வருகிறது.</p><p>எனவே சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இவருக்குச் சேர வேண்டிய தியாகிகள் உதவித் தொகையை அவரது வீட்டில் கிடைத்திடும் வகையில் ஏற்பாடு செய்திடுமாறும். அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்து உதவிடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>