<p><b>பிபிசி ஆவணப்பட விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:-</b></p><p>இந்தியாவில் தேர்தல் சீசன் துவங்கி விட்டதா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் பிரிட்டனின் லண்டன் நகரிலும், அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும் இதற்கான முயற்சிகள் துவங்கி விட்டன.</p><p>சில நேரங்களில் நம் நாட்டின் அரசியல் நம் எல்லையில் தோன்றுவது இல்லை. வெளிநாடுகளில் தோன்றி இங்கு வருகிறது. இந்தியாவை பற்றி தவறான கருத்துக்களை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற ஆவணப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன.</p><p>அரசியல் களத்தில் பாஜகவை சந்திக்கும் துணிச்சல் இல்லாதவர்கள், இது போன்ற ஊடகங்கள் வாயிலாக இந்த முயற்சியை மேற்கொள்கின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.</p>