<p><b>&nbsp;மூவர்ண தேசியக் கொடி, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை மீறி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் பறக்க விடப்பட்ட தினம், ஒவ்வொரு இந்தியரின் நினைவில் நீங்க இடம்பெற்றிருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்</b>.<br></p><p>1943ஆம் ஆண்டு, டிசம்பர் 30ஆம் தேதி, அந்தமான் நிகோபாரின் போர்ட் பிளேரில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நமது நாட்டின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.<br></p><p>இதன் 75ஆம் ஆண்டு தினத்தையையொட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், </p><p>போர்ட் பிளேரில், தேசியக் கொடி ஏற்றப்பட்ட இடத்தில், நேதாஜியின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய நிகழ்வின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2020/12/30/11609335940.jpg" style="width: 256px;"><br></p>