<p><b>'அறிவாலயம் என் கோவில்' என, ஆர்.எஸ்.பாரதி கூறியதால், அந்த கோவில் முன் பிச்சை எடுப்பதற்காக, அவர் வீட்டு முகவரிக்கு, காஞ்சிபுரம் பா.ஜ.,வினர், தபாலில் தட்டுக்கள் அனுப்பி வைத்து, எதிர்ப்பு தெரிவித்தனர்.</b></p><p>திருநெல்வேலியில் நடந்த பொதுக் கூட்டத்தில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசியபோது, 'ஐ.பி.எஸ்., படித்த கவர்னர் ரவி, தமிழக பா..ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் மென்டல்' என்றார்.</p><p>இதற்கு அண்ணாமலை, 'கோபாலபுரம், அறிவாலயத்தில் பிச்சை எடுப்பவர்கள் அப்படித்தான் பேசுவர்' என பதிலடி தந்துள்ளார். இதற்கு ஆர்.எஸ்.பாரதி, 'அறிவாலயம்தான் என் கோவில்' என, பதில் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த பா.ஜ.,வினர், அறிவாலயம் கோவில் என்றால், வெளில் அமர்ந்து பிச்சை எடுப்பதற்காக, அலுமினிய தட்டு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.</p><p>இந்நிகழ்ச்சியில், நகர ஊடக பிரிவு செயலர் காமேஷ், மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், செயலர் வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p><p>சென்னை, நங்கநல்லுாரில் உள்ள ஆர்.எஸ்.பாரதியின் வீட்டு முகவரிக்கு, பதிவு தபாலில் தனித் தனியாக ஐந்து தட்டுகளை அனுப்பி உள்ளனர்.</p>