<p>புதுக்கோட்டை சூசை பாண்டியாபுரம் பகுதியில் கமலஹாசனின் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்று நடும்&nbsp; விழா நடைபெற்றது.</p><p>மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமலஹாசனின் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை சூசை பாண்டியாபுரம் பகுதியில் மருத்துவ முகாம்&nbsp; மற்றும்&nbsp; சிறுவர் விளையாட்டு திடலில் மரக்கன்று நடும்&nbsp; விழா நடைபெற்றது.&nbsp; &nbsp;</p><p>இதில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஜவஹர் தலைமை தாங்கினார்.</p><p>நெல்லை மண்டல வழக்கறிஞர் அணி துணை‌அமைப்பாளர் ரமேஷ்,&nbsp; மாவட்ட துணை செயலாளர் அக்பர், மாவட்ட பொருளாளர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.</p><p>முன்னாள் நற்பணி இயக்க மாவட்ட&nbsp; பொறுப்பாளர் பிராங்க்ளின், வழக்கறிஞரணி ராஜா, மாநகர செயலாளர் சேர்மதுரை,&nbsp; சிசில்குமார், நற்பணி இயக்க மாநகர அமைப்பாளர் மணிகண்டன், ‌வட்டச் செயலாளர்கள் சீனிவாசன், அசோக், சந்தனம், செல்வம்,&nbsp; </p><p>கிளை செயலாளர் மாரிமுத்து, மரம் உரம்&nbsp; ராமர், இளைஞர் அணி நகர அமைப்பாளர் ருபிஸ்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு ஒன்றிய செயலாளர்&nbsp; ராபர்ட் செய்திருந்தார்.</p>