நாட்டின் மிகப் பெரும் நன்கொடையாளர்கள் - பிரேம்ஜியை பின்னுக்கு தள்ளிய ஷிவ் நாடார்!
நிருபர்
October 21, 2022
நாட்டின் மிகப் பெரும் நன்கொடையாளர்கள் - பிரேம்ஜியை பின்னுக்கு தள்ளிய ஷிவ் நாடார்!
<p><b>இந்தியாவில் மிகப்பெரும் அளவில் நன்கொடை கொடுப்பவர்கள் பட்டியலில், 'விப்ரோ' நிறுவனர் அசிம் பிரேம்ஜியை பின்னுக்கு தள்ளி, முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார், எச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார்.</b><br></p><p>'ஹுருன் இந்தியா' நிறுவனம் வெளியிட்டுள்ள, 'எடெல்கிவ் ஹுருன் இந்தியா நன் கொடையாளர்கள் பட்டியல் 2022' எனும் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:</p><p> ஷிவ் நாடார் 1,161 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியிருப்பதை அடுத்து, முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நாள் ஒன்றுக்கு, சராசரியாக 3 கோடி ரூபாயை நன் கொடையாக கொடுத்து உள்ளார்.</p><p>அசிம் பிரேம்ஜி 484 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல் இடம் வகித்து வந்த இவர், தற்போது இரண்டாவது இடத்துக்கு இறங்கி உள்ளார்.</p><p>நாட்டின் மிகப் பெரிய பணக்காரரான கவுதம் அதானி, ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் 190 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார்.</p><p>நாட்டில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை கொடுத்தவர்கள் எண்ணிக்கை 15.</p><p>கடந்த ஐந்து ஆண்டுகளில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை வழங்குபவர்கள் எண்ணிக்கை, இரண்டிலிருந்து 15 ஆக உயர்ந்து உள்ளது.</p><p>மிக இள வயது கொடையாளராக பட்டியலில் இடம்பெற்றுள்ளார், 'ஜீரோதா' நிறுவனத்தின் நிஹில் காமத். 36 வயதாகும் இவர், 100 கோடி ரூபாய்க்கும் மேல் நன்கொடை கொடுத்துள்ளார்.</p><p>இந்த ஆண்டில் புதிதாக 19 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மொத்தம் 832 கோடி ரூபாயை வழங்கி உள்ளனர். இம்முறை மொத்தம் ஆறு பெண்கள், நன்கொடையாளர்கள், பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.</p><p>ரோஹினி ரூபாய் நிலேகனி 120 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி, பெண்களில் முதலிடத்தை பெற்றுள்ளார்.</p>