<p><b>தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</b></p><p>இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் இன்று (04.08.2022&nbsp; வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறம் என அக்கட்சியின் மாநில தலைமை அறிவித்திருந்தது</p><p>அதனைத்தொடர்ந்து, இன்று (04.08.2022) காலை தூத்துக்குடி பாளை ரோடு சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில்,&nbsp; தென்மண்டல இணை அமைப்பு செயலாளர் அருணாதேவி தலைமையில் ,</p><p>மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், சாமானிய மக்களை பாதிக்கும் அரிசி மற்றும் பால்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி&nbsp; ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>இதில், இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.</p>