ஜெருசலேத்திற்கு புனித பயணம்; அரசு நிதி ரூ.20,000-ல் இருந்து ரூ.37,000 ஆக உயர்வு- முதல்வர் பழனிசாமி
நிருபர்
December 21, 2020
ஜெருசலேத்திற்கு புனித பயணம்; அரசு நிதி ரூ.20,000-ல் இருந்து ரூ.37,000 ஆக உயர்வு- முதல்வர் பழனிசாமி
<p><b>ஜெருசலேத்திற்கு புனித பயணம் மேற்கொள்வோருக்கு அரசு வழங்கும் நிதி ரூ.20,000-ல் இருந்து ரூ.37,000 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.</b></p><p>தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலேத்திற்கு புனித பயணம் செல்வோருக்கு அரசு வழங்கும் நிதி ரூ.20,000-ல் இருந்து ரூ.37,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். <br></p><p>கிறித்தவர்கள் மேற்கொள்ளும் இந்த புனிதப் பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹெம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா உள்ளிட்ட கிறித்துவ மத தொடர்புடைய பிற புனித தளங்களையும் உள்ளடக்கியது.</p><p>ஜெருசலம் புனித பயணம் மேற்கொள்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு 2011ம் ஆண்டில் இருந்து செயல்படுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>