ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறையின் கீழ் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.
நிருபர்
April 06, 2022
ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறையின் கீழ் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது
<p><b>ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறையின் கீழ் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது</b>.</p><p>தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் நேற்றைய முன் தினம் தமிழ்நாடு உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும் மாநிலகல்வி அமைப்பின் உதவியுடன் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.</p><p>இக்கருத்தரங்கமானது இறைவாழ்த்தோடும், தமிழ்த்தாய் வாழ்த்தோடும் தொடங்கப்பட்டது.</p><p>பேராசிரியர் ரத்னா வரவேற்புரை ஆழ்த்தினார். கல்லூரி முதல்வர் மீனாகுமாரி வாழ்த்துறையாற்றினார்.</p><p>தொடர்ந்து, இக்கருத்தரங்கின் முதல் அமர்வில் திருநெல்வேலி, ம.தி.தா. இந்து கல்லூரியின் இயற்பியல் பேராசிரியர் சிலம்பரசன் காமா கதிர்கள் குறித்தும் இரண்டாம் அமர்வில் தென்காசி, ஜே.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர். நரேஷ்முத்து அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.</p><p>இக்கருத்தரங்கின் நிறைவாகப் பங்கு பெற்ற பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ் வழங்கினர்.</p>