தூத்துக்குடியில் மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட மருமகன் கைது!
நிருபர்
March 25, 2022
தூத்துக்குடியில் மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட மருமகன் கைது!
<p><b>தூத்துக்குடியில் குடும்ப பிரச்சனையில் மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட மருமகன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</b><br></p><p>தூத்துக்குடி, திருச்செந்தூர் ரோடு, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த முருகன் மனைவி ஆரோக்கியமேரி (55) என்பவருக்கும், இவரது மருமகனான அதே பகுதியைச் சேர்ந்த சந்தனராஜ் மகன் கருப்பசாமி(24) என்பவருக்கும் நேற்று (24.03.2022) குடும்ப பிரச்சனையில் தகராறு ஏற்பட்டுள்ளது.</p><p>இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி மற்றும் அவரது சகோதரர் முனியசாமி(20) ஆகிய இருவரும் சேர்ந்து ஆரோக்கியமேரியை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இதுகுறித்து ஆரோக்கியமேரியின் மகள் சந்தனமாரி என்பவர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமி மற்றும் முனியசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.</p>