<p><b>நாடு முழுவதும் அனைத்து&nbsp; வங்கிகளுக்கும் 4 நாட்கள் மூடப்படுவதால் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது</b>.</p><p>மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கைவிடுதல் மற்றும் தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.&nbsp; அதன்படி மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் வருகிற 28, 29-ந்தேதி ஆகிய இருநாட்கள் நாடு முழுவதும் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.&nbsp; இந்த போராட்டத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கமும்&nbsp; ஆதரவு&nbsp; தெரிவித்திருக்கிறது.</p><p>அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கிராம மற்றும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் என நாடு முழுவதும் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில்&nbsp; பங்கேற்கின்றனர்.&nbsp; குறிப்பாக தமிழகத்தில் உள்ள 73 ஆயிரம் வங்கி கிளைகள் மற்றும் அதில் பணியாற்றும் 40 ஆயிரம் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>முன்னதாக வருகிற சனி (26-ந்தேதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (27-ந்தேதி) இரு நாட்களும் வங்கிகளுக்கு வார விடுமுறையாக உள்ள நிலையில்,. அதற்கு அடுத்து மார்ச் 28, 29 ஆகிய 2 நாட்களுக்கும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுவதால் மொத்தமாக 4 நாட்களுக்கு வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனால் வங்கி பணிகளான பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், காசோலை பரிவர்த்தனை போன்ற அனைத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏ.டி.எம். சேவையும் பாதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.</p>