<p><b>தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான போட்டியில்ல் 15வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட இசக்கிராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்!</b></p><p>தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கியது.</p><p>இந்த நிலையில் இன்று மடத்தூர் பைபாஸ் ரோடு,&nbsp; &nbsp;ஏழுமலையான் நகர் , கல்லூரி நகர்,&nbsp; திரவியரத்தின நகர், முருகேச நகர் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட&nbsp; பொது பிரிவினருக்கான&nbsp; 15வது வார்டில், திமுக சார்பில் போட்டியிட இசக்கிராஜா தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் வித்தியாவிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.</p>