"ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது புரெவி புயல்" - "ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே கரையைகடக்கும்"ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது புரெவி புயல்" - "ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே கரையைகடக்கும்
நிருபர்
December 04, 2020
"ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது புரெவி புயல்" - "ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே கரையைகடக்கும்
<p><b>மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது</b><br></p><p>புரெவி புயல், நேற்று மாலை 5.30 மணி அளவில் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். <br></p><p> பாம்பனில் இருந்து மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்த புரெவி புயல், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி இடையே கரையை கடக்கும் எனவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மேலும் வலுவிழக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் எனவும் ஒரு சில இடங்களில் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. <br></p>