<p><b>தூத்துக்குடி, புதுக்கோட்டை அருகில் உள்ள மங்களகிரி செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது</b>.<br></p><p>தூத்துக்குடி, புதுக்கோட்டை அருகே உள்ள மங்களகிரி செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளியில் வருடம் தோறும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம்<br></p><p>அதே போல் இந்த ஆண்டு பொங்கல் விழாவினை பள்ளி மாணவ மாணவியர், ஆசிரியர் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.<br></p><p>நட்டார்குளம் பங்கு தந்தை அம்புறோஸ் அடிகளார் தலைமை ஏற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். பள்ளியின் தாளாளரும், முதல்வருமான அருட்தந்தை ரூபர்ட் அனைவரையும் வரவேற்று பேசினார். ஆசிரியர் மெல்றோஸ் ஷிபா நன்றியுரை ஆற்றினார்.</p><p>இவ்விழாவின் போது, பொங்கல் சார்பான உரையாடல், பாடல்கள், கவிதைகள், ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள், ஆகிய அனைத்தும் பாரம்பரியத்தை நினைவுட்டின.</p><p>பின்னர், அனைவரும் ஒற்றுமையாக சர்க்கரை பொங்கலை அமர்ந்து உண்டு சமத்துவத்தை வெளிப்படுத்தினர்.</p>