<p dir="ltr"></p><p dir="ltr"><b><span ;="" style="font-size: 16px;">திருச்செந்தூரில் </span><span ;="" style="font-size: 16px;">உரிய அனுமதியின்றி லாரிகளில் சரள் மண் எடுத்து சென்ற இருவர் கைது போ</span><span ;="" style="font-size: 16px;"><span ;=""><span ;=""><span ;=""><u>லீ</u></span></span></span></span><span ;="" style="font-size: 16px;">சார்&nbsp; செய்து அவர்களிடமிருந்து சரள் மண் மற்றும் லாரிகளை பறிமுதல் செய்தனர்.</span></b><br></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஸ்டீபன் மற்றும் போலீசார் இன்று (29.12.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது திருச்செந்தூர் திருநெல்வேலி சாலையில் உள்ள காந்திபுரம் சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் எந்தவித உரிய அரசு அனுமதியின்றி சரள் மண் எடுத்துச் சென்றது தெரியவந்தது.</span></p><p> </p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து அந்த லாரிகளின் ஓட்டுநரான சின்னதுரை (39), த/பெ. காமாட்சி, முனைஞ்சிப்பட்டி, நாங்குநேரி, திருநெல்வேலி மற்றும் சேகர் (22), த/பெ. வெள்ளத்துரை, உச்சினி மாகாளியம்மன் கோவில் தெரு, நாங்குநேரி, திருநெல்வேலி ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 6 யூனிட் சரள் மணலும், TN 92 D 8232 (ASHOK LEYLAND TIPPER), TN 92 C 9499 ( BHARAT BENZ LORRY) ஆகிய எண்கள் கொண்ட இரண்டு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.</span></p>