<div align="left"><p dir="ltr"><span style="font-size: 16px;"><b>தூத்துக்குடி மாவட்டத்தில் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள், 7 தினங்களுக்குள் நிலுவைத் தொகை முழுவதையும் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</b></span><br></p></div><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இது தொடர்பாக <b>ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு :</b></span></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் உள்ளுர்&nbsp; கேபிள் ஆபரேட்டர்களாக பதிவு செய்து கொண்டவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பொது மக்களுக்கு ஒளி பரப்புவதற்காக சம்பந்தப்பட்ட சந்தாதாரர் ஒவ்வொருவரிடமும் 2011 முதல் 2017-ம் ஆண்டு வரை மாதம் தோறும் வசூல் செய்த சந்தா தொகையில் அரசுக்கு செலுத்த வேண்டிய பங்குத் தொகையினை 10 ஆண்டுகளாக செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;=""> இதனால் அரசுக்கு பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.&nbsp;</span><br> <span style="font-size:16px" ;="">இந்த தொகையினை செலுத்திட பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமும் பத்திரிக்கை செய்தி மூலமும் அறிவுறுத்தப் பட்டது. </span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">மேலும் 19.11.2021 மற்றும் 22.11.2021 நாளிட்ட பதிவுத் தபால் மூலமும் இந்த நிலுவைத் தொகையினை 15 தினங்களில் செலுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டது.&nbsp; &nbsp;இந்நாள் வரை அவர்கள் நிலுவைத் தொகையினை செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.&nbsp;</span><span style="font-size: 16px;">எனவே இந்த அறிவிப்பு கண்ட 7 தினங்களுக்குள் நிலுவைத் தொகை முழுவதையும் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">அவ்வாறு இல்லையெனில் நிலுவைத் தொகையினை வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூல் செய்வதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.</span></p>