<p dir="ltr"><span style="font-size: 16px;"><b>தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.</b></span><br></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 46). இவர் தூத்துக்குடி நோக்கி இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தாா். வாலசமுத்திரம் அருகே வந்த போது, பின்னால் வந்த கார் மோதி விபத்து&nbsp; &nbsp;ஏற்பட்டு&nbsp; உள்ளது. இதில் காயம் அடைந்த பாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.&nbsp;</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">அப்போது அங்கு வந்த பாலகிருஷ்ணனின் உறவினர்கள் அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இதனால் அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு முன்பு தரையில் அமர்ந்து&nbsp; போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவர், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், உதவி ஆய்வாளர் முத்துகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.&nbsp;</span></p><p> </p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">அதன்பிறகு டாக்டர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். இதனால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.</span></p>