மாணவ, மாணவியருக்கான தேசிய வாக்காளர் தின போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் அழைப்பு
நிருபர்
December 16, 2021
மாணவ, மாணவியருக்கான தேசிய வாக்காளர் தின போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் அழைப்பு
<div align="left"><p dir="ltr"><span style="font-size: 16px;"><b>தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.</b></span><br></p></div><div align="left"><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">இதுகுறித்து <b>ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :</b></span></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">ஒவ்வொரு வருடமும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் ஜனநாயக நாட்டில் தேர்தல்களின் முக்கியத்துவம், 100 சதவீதம் பதிவு, வாக்காளர் உதவித் தொலைபேசி செயலி, தூண்டுதல் இல்லா வாக்குப்பதிவு, வாக்காளராக பதிவதின் முக்கியத்துவம், ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடந்த இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</span></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மேற்காணும் தலைப்புகளின் அடிப்படையில் சுவரொட்டிகள் தயாரித்தல், ஓவியப்போட்டி, முழக்கத்திற்கான வார்த்தைகள் ஏற்படுத்துதல், பாட்டுப் போட்டி (2-3 நிமிடவீடியோபதிவு), குழு நடனம் (2-3 நிமிடவீடியோபதிவு) மற்றும் கட்டுரைப் போட்டி போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.</span></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">மேற்படி, போட்டிகளுக்காக தயாரிக்கப்படும் எந்தவொரு இனத்திலும் அரசியல் சார்போ, பிறரை புண்படுத்தும் வகையிலான வாசகங்களோ இடம்பெறக் கூடாது. ஒவ்வொரு இனத்திலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதுடன், முதல் 15 இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியர்களின் படைப்புகள் அனைத்தும் தலைமைத் தேர்தல் அலுவலர் அவர்களின் அலுவலகத்திற்கும் சமர்பிக்கப்படவுள்ளது. எனவே, இப்போட்டிகள் அனைத்தும் பள்ளிமற்றும் கல்லூரிகளில் நடத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது.</span></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">இதுகுறித்த அனைத்து விவரங்களும் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாத மாணவ, மாணவிகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் தங்களுடைய படைப்புகளை 25.12.2021க்குள் சமர்பிக்கலாம். அல்லது https://www.elections.tn.gov.in/SVEEP2022/officersLogin என்ற இணையதளத்தில் நேரடியாகவும் பதிவேற்றம் செய்யலாம். </span></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">எனவே, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் இப்போட்டிகளில் பங்குகொண்டு தேர்தல் ஜனநாயகத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கு கொள்வதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்திடுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், கேட்டுக் கொண்டுள்ளார்.</span></p></div>