<p><b>தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சீா்வரிசைகளுடன் கூடிய இலவச திருமணத்தை மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் நடத்தி வைத்தார்</b>.<br></p><p>தூத்துக்குடி சில்வா்புரத்தில் செயல்பட்டு வரும் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம் சாா்பில், ஆண்டுதோறும் நன்கொடையாளா்கள் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நடத்தப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.<br></p><p>அதனடிபடையில், இன்று காலை 6 ஜோடிகளை தேர்வு செய்து அவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவர்கள் தமிழகத்தின் திருவள்ளூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட&nbsp; மாவட்டங்களை சேர்ந்த&nbsp; மாற்றுத்திறனாளிகளாவர்<br></p><p>சுயம்வரம் மூலம் தேர்வு செய்யப்பட்ட சிலுவை அந்தோணி வளன்- செல்வ புனிதா, லிங்கதுரை- இரமணி, யோவான்-சசிகலா, கஞ்சையா- உமா மகேஸ்வரி, கற்பக ராஜ்-ரதி, அந்தோணி ராஜ்- ஷிலாவசந்த குமாரி ஆகிய 6 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் திருமணத்தை நடத்தி வைத்தார்.<br></p><p>இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், லூசியா இல்ல இயக்குநா் ஜான் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திருமணம் செய்துகொண்ட ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான தங்கதாலி, திருமண உடைகள், மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி பெட்டி, கட்டில், மெத்தை, பீரோ, இன்டக்சன் அடுப்பு, வீட்டு உபயோக பொருட்கள், ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு மற்றும் அரசி போன்ற சீதன பொருட்கள்&nbsp; வழங்கப்பட்டன.&nbsp;<br></p><p>இவ்விழாவில், அருட்பணியாளர்கள், அருட்சகோதர்கள், நன்கொடையாளர்கள், மருத்துவர்கள், நிர்வாக உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.<br></p>