<p dir="ltr"><b><span ;="" style="font-size: 16px;">தூத்துக்குடி மாநகராட்சியில்&nbsp; அலுவலகத்திற்கு குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிக்கு திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட நகராட்சிகளில் இருந்து வந்துள்ள சுகாதார&nbsp; முன் களப்பணியாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் </span><span ;="" style="font-size: 16px;">இன்று (06.12.2021) </span><span ;="" style="font-size: 16px;"> நேரில் சந்தித்து அறிவுரைகள் வழங்கினார்கள்.</span></b><br></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிக்கு திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட 6 நகராட்சிகளில் இருந்து 52 சுகாதார&nbsp; முன்களப்பணியாளர்கள் வருகை தந்துள்ளனர்.&nbsp;</span><span style="font-size: 16px;">பல்வேறு நகராட்சிகளில் இருந்து வரப்பெற்ற பணியாளர்கள் மாநகர் பகுதியில் மழை நீர் வெளியேற்றும் பணிகளில் ஈடுபட உள்ளனர்.</span></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">இந்நிகழ்வில் </span><span style="font-size:16px" ;=""> மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ </span><span style="font-size:16px" ;="">மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, மாநகர் நல அலுவலர் மரு.வித்யா ஆகியோர் உடன் இருந்தனர்.&nbsp;</span></p>