<p dir="ltr"><span style="font-size: 16px; color: rgb(57, 123, 33);"><b>மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் நினைவு தினம் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அஇஅதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.</b></span><br></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிச. 5-ஆம் தேதி காலமானாா். அவரது மறைவை யொட்டி ஒவ்வொரு ஆண்டும் அதிமுகவினா் இரங்கல் ஊா்வலம், திருஉருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை மேற்கொள்கின்றனா்.</span></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">அதன்படி நிகழாண்டில் தூத்துக்குடி&nbsp; மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜெயலலி தாவின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.</span></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">அதன் ஒரு பகுதியாக, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட,&nbsp; ஓட்டப் பிடாரம் கிழக்கு ஒன்றியத்தில், அதிமுக ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள்&nbsp; ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமான காந்தி காமாட்சி&nbsp; தலைமையில், ஓட்டப் பிடாரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குறுக்குச்சாலை, பசுவந்தனை</span><span style="font-size:16px" ;="">, வேப்பலோடை</span><span style="font-size:16px" ;=""> உள்ளிட்ட அனைத்து கிராம பகுதிகளிலும், அலங்கரித்து வைக்கப்பட்ட மறைந்த ஜெயலலிதாவின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.</span></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">இந்நிகழ்வில்,&nbsp; ஒன்றிய,நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</span><br></p>