<p><b>தமிழக அரசு&nbsp; லாட்டரி சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</b></p><p>இது தொடர்பாக <b>தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ். முரளிதரன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :</b>&nbsp;</p><p>இந்தியாவிலே சிறந்த முதல்வராக தமிழக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார் அவரது கடின உழைப்பால் தமிழகத்தை முன்னேற்றி கொண்டு வருகிறார்.&nbsp;<br></p><p>கடந்த 10ஆண்டுகாலம் அ.தி.மு.க ஆட்சியில், எடப்பாடி, ஒ.பி.எஸ் தமிழகத்தை சுரண்டி பாலைவனமாக மாற்றியுள்ளார்.<br></p><p>தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு போதிய வருமானம் இல்லாததாலும், ஒன்றிய&nbsp; மோடி அரசின் ஒத்துழைப்பு இல்லாததாலும் அரசு சிரமப்படு வதனால் தமிழக அரசு&nbsp; லாட்டரி சீட்டு முறையை கொண்டு வந்து தமிழக அரசு நடத்த வேண்டும்.<br></p><p>தமிழகத்தில், கனிம வளங்கள் குவிந்து கிடக்கிறது. கடந்த காலத்தில் ஓரிருவர் செய்த தவறுகளால் முற்றிலுமாக கனவளங்களை ஏற்றுமதி செய்ய தடை செய்திருப்பது அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது.<br></p><p>எனவே தமிழக அரசு கனிவளங்களை ஏற்றுமதி செய்ய அதிரடி திட்டங்களை வகுத்து, டெண்டர் மூலம் தனி ஒருவருக்கு மட்டும் அனுமதி வழங்காமல் ஏற்றுமதி உரிமையை பலருக்கு வழங்கினால் அதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். என அம்மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.</p>