<p><b>தூத்துக்குடியில் அடைமழையிலும், விடாது பணி செய்யும் போக்குவரத்து காவல்துறையினருக்கு&nbsp; ” மழை நீர் புகா ”( ரெயின் கோட் ) உடைகளை ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.<br></b></p><p>தூத்துக்குடியில் அடாது மழையிலும் விடாது பணி செய்யும் போக்குவரத்து காவல்துறையினரின் சேவையை பாராட்டியும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் தூத்துக்குடி ரோட்டரி கிளப் சங்கம் சார்பாக போக்குவரத்து காவல்துறையினருக்கு மழை நீர் புகா உடைகளை (Rain Coat) வழங்கியுள்ளனர்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2020/12/02/11606904041.jpg" title="Vilasal news" style="width: 100%;"><br></p><p>வி.வி.டி சிக்னல் சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்,&nbsp; போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உட்பட 60 போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கினார்.&nbsp;<br></p><p>மேலும் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார். </p><p>இந்நிகழ்ச்சியை ரோட்டரி கிளப் ஆப் பியர்ல்சிட்டி தலைவர் ஜூடு ஆரோக்கிய அன்டனி, செயலாளர் மகாலிங்கம், பியர்ல்சிட்டி கிளப் (உதவி ஆளுநர் பாலமுருகன், முன்னாள் தலைவர்கள் பாலாஜி, பொதிகை கண்ணன், சிவராம கிருஷ்ணன், விஜயன், உதவி தலைவர்கள் ராஜா, உறுப்பினர்கள் செந்தில் ஆறுமுகம்,&nbsp; மகராஜன், முத்துராமன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.<br></p>