<p dir="ltr"><b><span ;="" style="font-size: 16px;">தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்தீஸ் திருவுருவ சிலைக்கு கனிமொழி எம்பி, அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி</span><span ;="" style="font-size: 16px;">னர்.</span></b><br></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">தமிழக அரசின் சார்பில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.&nbsp; அன்னாரின் புகழுக்கு பெருமைச் சேர்க்கின்ற வகையில் தூத்துக்குடியில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.</span></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">இந்நிலையில், நவம்பர் 15-ம் தேதி இன்று குரூஸ் பர்னாந்தீஸ் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி சாலையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவசிலைக்கு</span><span style="font-size:16px" ;=""> தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</span></p><p> </p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் முக்கிய பிரமுகர்க ள் பலர் கலந்துகொண்டனர்.</span></p>