<p><b>தூத்துக்குடியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 26ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப் பட்டுள்ளது.</b></p><p>இது தொடர்பாக <b style="color: rgb(57, 123, 33);">தூத்துக்குடி நகர் மின்வாரிய செயற்பொறியாளர்&nbsp; அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் :</b></p><p>&nbsp;"26.10.2021 செவ்வாய் கிழமை அன்று&nbsp; அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.&nbsp;</p><p>இதன் காரணமாக மாப்பிள்ளையூரணி, தாளமுத்து நகர், சிலுவைப்பட்டி, கிருஷ்ண ராஜபுரம், முத்துகிருஷ்ணா புரம், திரேஸ்புரம், பூபால்ராயபுரம், லூர்தம்மாள்புரம், அலங்காரதட்டு, மேல அரசடி, கீழஅரசடி, வெள்ள பட்டி, தருவைகுளம், பட்டிண மருதூர், பனையூர், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம்,&nbsp; பூபாலராயர் புரம், மாணிக்கபுரம், குரூஸ்புரம்,&nbsp; சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தரையர் காலனி, வெற்றிவேல்புரம், முத்துகிருஷ்ணா புரம். ராமர் விளை மற்றும் அதை&nbsp; சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>