<p><b>தூத்துக்குடியில் அதிமுக பொன்விழாவை முன்னிட்டு மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.</b></p><p>இது தொடர்பாக <span style="font-weight: bold;"><span style="color: rgb(0, 0, 255);">தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞாணி செயலாளர் திருச்சிற்றம்பலம் தெரிவித்ததாவது </span>:</span></p><p>தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன்&nbsp; வழிகாட்டுதலின் படி மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞாணி செயலாளர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டின்படி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது, தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் உள்ள&nbsp;<span style="font-weight: bold;"> </span><span style="color: rgb(206, 0, 0);"><span style="font-weight: bold;">D.A. திருமண மண்டபத்தில் வருகிற&nbsp; 26.10.2021 அன்று மாலை 6.00 மணி அளவில்</span> </span>நடைபெறவுள்ளது.</p><p>இதில், 170 பெண்களுக்கு சேலை, 50 ஆண்களுக்கு வேஷ்டி 20 அயன் பாகஸ் மற்றும் தையல் மஷின்&nbsp; உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.</p><p>அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கும் D.A. திருமண மண்டபத்தில் இரவு உணவு வழங்கப்படும் என தெரிவித்தார்.</p>