சென்னை-எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் 4ம் தேதி சிறப்பு ரயில்
நிருபர்
December 02, 2020
சென்னை-எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு 4ம் தேதி சிறப்பு ரயில்
<p><span style="font-weight: 700;">சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு 4ம் தேதி மாலை 4மணிக்கும் எழும்பூரில் இருந்து காரைக்காளுக்கு 4ம் தேதி இரவு 9மணி அளவிலும் சிறப்பு ரயில்_தெற்கு ரயில்வே <br></span></p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-<br></p><p>சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் சிறப்பு ரெயில் (வண்டி எண்:06105), சென்னையில் இருந்து வரும் 4-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.05 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். </p><p>இதைப்போல் திருச்செந்தூர்- சென்னை சிறப்பு ரெயில் (06106), திருச்செந்தூரில் இருந்து வரும் 5-ந்தேதி மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை வந்தடையும்.<br></p><p>சென்னை எழும்பூர்-காரைக்கால் சிறப்பு ரெயில்(06175), வரும் 4-ந்தேதி இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.50 மணிக்கு காரைக்கால் சென்றடையும். இதைப்போல் காரைக்கால்- சென்னை சிறப்பு ரெயில் (06176), வரும் 5-ந்தேதி இரவு 9.20 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.55 மணிக்கு சென்னை வந்தடையும்.<br></p><p>மேலும் விழாக்கலங்களை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து கர்நாடகா மற்றும் ஒடிசா வழியாக செல்லும் 30 சிறப்பு ரெயில்களின் பயண காலங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.<br></p>