சபரிமலையில் நாள்தோறும் 2,000 பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு அனுமதி!
நிருபர்
December 02, 2020
சபரிமலையில் நாள்தோறும் 2,000 பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு அனுமதி!
<p><b>பம்பை: சபரிமலையில் நாள்தோறும் 2,000 பக்தர்களை அனுமதிக்கலாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது.</b><br></p><p>சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலபூஜை, மகரபூஜைகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஆன்லைனில் முன்பதிவு செய்த 1,000 பக்தர்கள் மட்டுமே நாள்தோறும் அனுமதிக்கப்படுகின்றனர்.<br></p><p>மேலும் வார இறுதி நாட்களில் 2,000 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த காலங்களை ஒப்பிடுகையில் பக்தர்கள் வருகை பெருமளவு குறைந்துவிட்டது. தற்போதைய பக்தர்கள் எண்ணிக்கையானது சொற்ப அளவுதான் எனவும் கூறப்பட்டது.</p><p>பெருவழிப்பாதை யாத்திரை, புல்லுமேடு யாத்திரைக்கும் பம்பையில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால்மட்டுமே நிலக்கல்லை தாண்டி பம்பைக்கு செல்ல முடியும் என்கிற நிலை உள்ளது.<br></p><p>மேலும் கொரோனா கால நெருக்கடிகளால் எரிமேலி போன்ற சபரிமலை ஐயப்ப பக்தர்கள் செல்லும் புனித தலங்களும்கூட வெறிச்சோடி கிடக்கின்றன. இதனையடுத்து பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.<br></p><p>இதனை ஏற்று நாள்தோறும் 2,000 பக்தர்கள் வரையும் வார இறுதி நாட்களில் 3,000 பக்தர்களையும் அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி அளித்துள்ளது.<br></p>