<p><b>"மகாகவி" பாரதியாரின் நூறாவது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.</b></p><p>யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்</p><p>இனிதாவ தெங்கும் காணோம்.</p><p>பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்</p><p>இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு</p><p>நாமமது தமிழரெனக் கொண்டிங்கு</p><p>வாழ்ந்திடல் நன்றோ? சொல்லீர்!&nbsp;</p><p>தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்</p><p>பரவும்வகை செய்தல் வேண்டும்.</p><p>என தமிழ் மொழியின் சிறப்பையும்....</p><p>யாமறிந்த புலவரிலே</p><p>கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்</p><p>பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை.</p><p>உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!</p><p>ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்; ஒரு சொற் கேளீர்!</p><p>சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்&nbsp;</p><p>தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!</p><p>என தமிழ் புலவர்களையும், புலமைகளையும்....</p><p>பார் போற்றும் வகையில் பாடிய "மாகாகவி" பாரதியார், கவிஞர் மட்டும் அல்ல, 1907 ஏப்ரல் மாதம் சென்னையில் " இந்தியா " என்று தொடங்கப்பட்ட வாரத இதழின் ஆசிரியராக பொறுப்பேற்று பத்திரிக்கையாளராக விளங்கிய சிறப்பும் அவருக்கு உண்டு என்பதை இத்தருணத்தில் நினைவு கூர்ந்து பெருமை கொண்டு, ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் நெஞ்சம் வைத்து போற்றக்கூடிய, மூத்த பத்திரிக்கையாளர் "மாகாகவி" பாரதியாரின்&nbsp; நூறாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற அலுவலகத்தில் அவரது திருஉருவப்படத்திற்கு, பத்திரிக்கையாளர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.</p><p>இந்நிகழ்வில், தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற கௌரவ ஆலோசகரும், மூத்த செய்தியாளரும், ஜெயா டிவி செய்தியாளருமான அருண், தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற தலைவரும் தமிழ் முரசு செய்தியாளருமான சண்முக சுந்தரம், இணைச் செயலாளரும் நியூஸ்&nbsp; ஜெ செய்தியாளருமான சிதம்பரம், வின் டிவி ஒளிப்பதிவாளர் பேச்சிமுத்து, தமிழக நியூஸ் செய்தியாளர் வள்ளிராஜ், தமிழக நியூஸ் புகைப்பட கலைஞர் நடராஜன், ராஜகமலம் செய்தியாளர் பொன்ராஜ் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>