<div align="left"><p dir="ltr"><b>தமிழ்நாடு முழுவதும் தூத்துக்குடி உட்பட 37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</b><br></p> <p dir="ltr">இது குறித்து&nbsp;<b>தமிழக அரசின் முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:&nbsp;</b></p> <p dir="ltr">தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணியில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணி புரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.</p></div><div align="left"><p dir="ltr"> இதன் படி, தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதில்,&nbsp; தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ஞானகௌரி தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம்&nbsp; மற்றும் ஆய்வு மையம் நிர்வாக அலுவலராகவும்,&nbsp; <br> விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக&nbsp;பணியாற்றி கே.பாலதண் டாயுதபாணி தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p></div>