50 நாட்களை கடந்த திமுக ஆட்சி: சீமான் விமர்சனம்
நிருபர்
June 27, 2021
50 நாட்களை கடந்த திமுக ஆட்சி: சீமான் விமர்சனம்
<p><b>திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 50 நாட்களை கடந்தும், தமிழகத்தின் பிரச்னைகள் தீர்வதற்கான அறிகுறிகள் இல்லை என நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார்</b>.<br></p><p>இது தொடர்பாக ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் சீமான், “திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்னைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவு அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு என்னவானது?</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/06/27/11624798833.jpg" style="width: 256px;"><br></p><p>தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே! மக்களின் பிரச்னைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா?” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.<br></p>