<p><b>பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தன்னார்வ நண்பர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.&nbsp;</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள&nbsp; பசுவந்தனை தன்னார்வ நண்பர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் ரூ.1 லட்சத்து 76 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மருத்துவ அலுவலர் டாக்டர் அன்புமாலதியிடம் வழங்கினார்.</p><p>இந்நிகழ்ச்சிக்கு ஓட்டபிடாரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தங்கமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/06/26/11624710335.jpg" alt="பசுவந்தனை ஆரம்ப சுகாதார நிலையம்" style="width: 100%;"><br></p><p>தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார். மருத்துவமனை பேறுகால வார்டு மேம்படுத்துவது, மருத்துவமனையை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.&nbsp;</p><p>பசுவந்தனை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தப்பட்ட 30 படுக்கை வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற மருத்துவ அலுவலரிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து பசுவந்தனை கைலாசநாதர் திருக்கோவிலில் ராஜகோபுரம் அமைப்பது குறித்து ஆய்வு செய்தார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/06/26/11624710393.jpg" alt="pasuvandanai primary health center" style="width: 100%;"></p><p>நிகழ்ச்சியில், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, விளாத்திகுளம் பேரூராடசி செயலாளர் வேலுச்சாமி, வடக்கு மாவட்ட இளைஞ ரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், யூனியன் கவுன்சிலர்கள் ராஜேஷ்வேல், வெள்ளைச்சாமி, </p><p>பஞ்சாயத்து தலைவர்கள் முத்துக்குமார், லெட்சுமிசிதம்பரம், சண்முகையா, மாரியப்பன், பழனிபாண்டியன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சத்தியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்</p>