ஓபிஎஸ்-ஐ தான் முதல்வராக்கி இருப்பேன் – சசிகலாவின் 44ஆவது ஆடியோ!
நிருபர்
June 15, 2021
ஓபிஎஸ்-ஐ தான் முதல்வராக்கி இருப்பேன் – சசிகலாவின் 44ஆவது ஆடியோ!
<p>சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்த சசிகலா அதிமுகவில் பல மாற்றங்கள் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.<br></p><p>ஆனால், தான்அரசியலில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார் சசிகலா. அதிமுக தேர்தலில் தோற்று விட்டால் மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவதற்கு தான் சசிகலா இந்த சதித் திட்டத்தை திட்டுவதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அது, இப்போது உண்மையாகி விட்டது.<br></p><p>எனினும், சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என ஈபிஎஸ் திட்டவட்டமாக கூறுவதால், சசிகலா மீண்டும் கட்சியில் இணைவாரா இல்லையா என்பது புரியாத புதிராகவே உள்ளது.<br></p><p>இதனிடையே, அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசுவது போன்ற ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாவது அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.<br></p><p>இது தொடர்பாக, நேற்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்தாலோசித்த ஓபிஎஸ் – ஈபிஎஸ், சசிகலாவுடன் பேசுபவர்களை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றினர். அதன் படி சசிகலாவிடம் தொலைபேசியில் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.<br></p><p>இந்த நிலையில், சசிகலா தேனியைச் சேர்ந்த தொண்டரிடம் பேசிய 44வது ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், ஓபிஎஸ் அவராகத் தான் ராஜினாமா செய்தார். </p><p>அப்படி செய்திருக்காவிட்டால் அவரை தான் முதல்வராக அமர வைத்து இருப்பேன் என சசிகலா கூறுகிறார். அதிமுகவில் நடைபெறுவதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா விடமாட்டேன் என்றும் கூறுகிறார்.<br></p>