விநாயகர் 108 போற்றி துதியை பாட ; நம் காரிய தடைகள் நீங்கும்!
நிருபர்
November 12, 2020
விநாயகர் 108 போற்றி துதியை நாம் தினமும் சொல்லி வர நம் காரிய தடைகள் நீங்கி,செயல்களில் வெற்றி கிடைக்கும்.உங்களின் வல்வினைகள் நீங்கி நல்லருள் பெறலாம். ஓம் விந...
<p>விநாயகர் 108 போற்றி துதியை நாம் தினமும் சொல்லி வர நம் காரிய தடைகள் நீங்கி,செயல்களில் வெற்றி கிடைக்கும்.உங்களின் வல்வினைகள் நீங்கி நல்லருள் பெறலாம். </p><p>ஓம் விநாயகனே போற்றி</p><p>ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி</p><p>ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி</p><p>ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி</p><p>ஓம் அமிர்த கணேசா போற்றி</p><p>ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி</p><p>ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி</p><p>ஓம் ஆனை முகத்தோனே போற்றி</p><p>ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி</p><p>ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆனந்த உருவே போற்றி</p><p><br></p><p>ஓம் ஆபத் சகாயா போற்றி</p><p>ஓம் இமவான் சந்ததியே போற்றி</p><p>ஓம் இடரைக் களைவோனே போற்றி</p><p>ஓம் ஈசன் மகனே போற்றி</p><p>ஓம் ஈகை உருவே போற்றி</p><p>ஓம் உண்மை வடிவே போற்றி</p><p>ஓம் உலக நாயகனே போற்றி</p><p>ஓம் ஊறும் களிப்பே போற்றி</p><p>ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி</p><p>ஓம் எளியவனே போற்றி</p><p>ஓம் எந்தையே போற்றி</p><p>ஓம் எங்குமிருப்பவனே போற்றி</p><p>ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி</p><p><br></p><p>ஓம் ஏழை பங்காளனே போற்றி</p><p>ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி</p><p>ஓம் ஐயனே போற்றி ஓம் ஐங்கரனே போற்றி</p><p>ஓம் ஒப்பிலாதவனே போற்றி</p><p>ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி</p><p>ஓம் ஒளிமய உருவே போற்றி</p><p>ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி</p><p>ஓம் கருணாகரனே போற்றி</p><p>ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி</p><p>ஓம் கணேசனே போற்றி</p><p><br></p><p>ஓம் கணநாயகனே போற்றி</p><p>ஓம் கண்ணிற்படுபவனே போற்றி</p><p>ஓம் கலியுக நாதனே போற்றி</p><p>ஓம் கற்பகத்தருவே போற்றி</p><p>ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி</p><p><br></p><p>ஓம் கிருபாநிதியே போற்றி</p><p>ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி</p><p>ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி</p><p>ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி</p><p>ஓம் குணநிதியே போற்றி</p><p>ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி</p><p><br></p><p>ஓம் கூவிட வருவோய் போற்றி</p><p>ஓம் கூத்தன் மகனே போற்றி</p><p>ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி</p><p>ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி</p><p>ஓம் கோனே போற்றி</p><p>ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி</p><p>ஓம் சடுதியில் வருபவனே போற்றி</p><p><br></p><p>ஓம் சங்கரன் புதல்வனே போற்றி</p><p>ஓம் சங்கடஹரனே போற்றி</p><p>ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி</p><p>ஓம் சிறிய கண்ணோனே போற்றி</p><p>ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி</p><p>ஓம் சுருதிப் பொருளே போற்றி</p><p><br></p><p>ஓம் சுந்தரவடிவே போற்றி</p><p>ஓம் ஞாலம் காப்பவனே போற்றி</p><p>ஓம் ஞான முதல்வனே போற்றி</p><p>ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி</p><p>ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி</p><p>ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி</p><p>ஓம் துயர் துடைப்பவனே போற்றி</p><p>ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி</p><p><br></p><p>ஓம் தேவாதி தேவனே போற்றி</p><p>ஓம் தொந்தி விநாயகனே போற்றி</p><p>ஓம் தொழுவோ நாயகனே போற்றி</p><p>ஓம் தோணியே போற்றி</p><p>ஓம் தோன்றலே போற்றி</p><p>ஓம் நம்பியே போற்றி</p><p>ஓம் நாதனே போற்றி</p><p>ஓம் நீறணிந்தவனே போற்றி</p><p>ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி</p><p>ஓம் பழத்தை வென்றவனே போற்றி</p><p>ஓம் பாரதம் எழுதியவனே போற்றி</p><p>ஓம் பரம்பொருளே போற்றி</p><p>ஓம் பரிபூரணனே போற்றி</p><p>ஓம் பிரணவமே போற்றி</p><p><br></p><p>ஓம் பிரம்மசாரியே போற்றி</p><p>ஓம் பிள்ளையாரே போற்றி</p><p>ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி</p><p>ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி</p><p>ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி</p><p>ஓம் புதுமை வடிவே போற்றி</p><p>ஓம் புண்ணியனே போற்றி</p><p><br></p><p>ஓம் பெரியவனே போற்றி</p><p>ஓம் பெரிய உடலோனே போற்றி</p><p>ஓம் பேரருளாளனே போற்றி</p><p>ஓம் பேதம் அறுப்போனே போற்றி</p><p>ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி</p><p>ஓம் மகிமையளிப்பவனே போற்றி</p><p>ஓம் மகாகணபதியே போற்றி</p><p>ஓம் மகேசுவரனே போற்றி</p><p>ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி</p><p>ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி</p><p>ஓம் முறக்காதோனே போற்றி</p><p>ஓம் முழுமுதற்கடவுளே போற்றி</p><p>ஓம் முக்கணன் மகனே போற்றி</p><p>ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி</p><p>ஓம் மூத்தோனே போற்றி</p><p><br></p><p>ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி</p><p>ஓம் வல்லப கணபதியே போற்றி</p><p>ஓம் வரம்தரு நாயகனே போற்றி</p><p>ஓம் விக்னேஸ்வரனே போற்றி</p><p>ஓம் வியாஸன் சேவகனே போற்றி</p><p>ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி</p><p>ஓம் வெற்றியளிப்பவனே போற்றி !</p>